இலங்கை

தேர்தலுக்கு தயார் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ

எந்த நேரத்திலும், எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கட்சி என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்று (22) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கட்சி தீர்மானத்துக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்,ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.தற்போதைய பதவி நிலையே தொடரும் என்றார்.

கட்சியின் யாப்புக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவரை நியமிக்க முடியாது என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார் என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.இதற்கு பதிலளித்த அவர் சுயாதீனமற்றவர் என்றார்.

அத்துடன் எந்த நேரத்திலும்,எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் சகல சவால்களையும் எதிர்கொள்வோம் என்றார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content