பொழுதுபோக்கு

காட்டுன கவர்ச்சி பத்திக்கிச்சி…. கிடு கிடுவென உயர்ந்த சம்பளம்

பிரபல நடிகை அனுபாமா பரமேஸ்வரன் இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக அனுபமா தான் நடிக்கிறார்‌. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கார்த்திகேயா 2 படத்தில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான தில்லு ஸ்கொயர் படத்திலும் நடித்தார்.

இதில் மிகவும் கவர்ச்சியாக மற்றும் நெருக்கமான காட்சியில் அனுபாமா நடித்திருந்தார். இதனால் போஸ்டர் வெளியான போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக தில்லு ஸ்கொயர் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட அனுபாமா கலந்து கொள்ளவில்லை.

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு அனுபாமாவின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது.

தில்லி ஸ்கொயர் படத்திற்கு முன்னதாக ஒரு படத்திற்கு ஒரு கோடி மட்டும் சம்பளம் வாங்கி வந்தார்.

இப்போது சம்பளத்தை டபுள் ஆக்கி உள்ளார். அதாவது இரண்டு கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறாராம் அனுபாமா. இவருக்கு இருக்கும் மார்க்கெட்டால் தயாரிப்பாளர்களும் கேட்ட பணத்தை கொடுத்து அவரை புக் செய்து வருகிறார்கள்.

(Visited 43 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!