ஆசியா செய்தி

சிங்கப்பூரில் தண்டனைகள் கடுமையாக்கப்படலாம்

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டுகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

மின்-சிகரெட்டுகளை விளம்பரப்படுத்துவது, அவற்றைத் தருவிப்பது, விநியோகிப்பது ஆகியவற்றுக்கான தண்டனைகளை ஆணையம் மறுஆய்வு செய்கிறது.

சட்ட விரோத மின்-சிகரெட்டுகள் இணையத்தில் விற்கப்படுவதைத் தொடர்பு, தகவல், சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திருவாட்டி ரஹாயு மஹ்ஸாம்சுட்டினார்.

அத்தகைய விற்பனையைக் கண்காணிக்கச் சமூக ஊடகங்கள், மின்-வர்த்தகத் தளங்கள், தகவல் பரிமாற்றுத் தளங்கள் போன்றவற்றை ஆணையம் கூர்ந்து கவனிப்பதாக அவர் கூறினார்.

இளைஞர்கள் மின்-சிகரெட்டுகளின் ஆபத்தைப் புரிந்துகொள்ள இணையத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு ரஹாயு பதிலளித்தார்.

கடந்த ஆண்டு மின்-சிகரெட்டுகளுடன் தொடர்புடைய ஏறக்குறைய 8,000 குற்றங்களை அதிகாரிகள் கையாண்டனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!