இந்தியா

மும்பையில் அதிர்ச்சி சம்பவம்… 12 பேருக்கு விஷமாக மாறிய சிக்கன் ஷவர்மா!

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கோரகானின் கிழக்கு பகுதி சந்தோஷ் நகரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவினால் ஏற்பட்ட பாதிப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இந்த தகவல் அறிந்த பிரஹன்மும்பை முனிசிபல் அதிகாரிகள் அந்த கடையை ஆய்வு செய்தனர். இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Chicken Shawarma Recipe - Easy NO OVEN | Hungry for Goodies

இது தொடர்பாக பிஎம்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தோஷ் நகர் செயற்கைக்கோள் கோபுரம் அருகே இயங்கிய ஹோட்டலில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை கலந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content