தமிழ்நாடு

சென்னை – பால்கனியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை… போராடி மீட்ட மக்கள்!

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்த பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் ஒரு வயதுடைய குழந்தை இன்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியின் பால் கனியில் இருந்து தாவி குழந்தை ஒன்று சன் சைடில் விழுந்துள்ளது. அந்த வீட்டில் உள்ளவர்கள் யாரும் வீடியோவில் காணப்படவில்லை. பால் கனியில் இருந்து தாவி குழந்தை சன் சைடில் சரிந்தபடி கீழே வந்துள்ளது.

இதைக் கண்டு எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர். பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

குழந்தை மீட்பு

கரணம் தப்பினால் மரணம் என்பதை அறியாமல் அந்தக் குழந்தை, தனக்கே உரித்தான சுட்டித்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை மேற்கூரையில் லேசாக சறுக்கியது. அதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் கூச்சல் இட்டனர். அதுவரை சாந்தமாக இருந்த குழந்தை அழத்தொடங்கியது. அதேவேளையில், ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர்.

முதலில் துணி கொண்டு வந்து குழந்தையை பிடிக்க முயன்று உள்ளனர். அதன்பின் பெரிய ஜமுக்காளம் கொண்டு வந்து குழந்தை கீழ் விழுந்ததும் அதை பிடிக்க முயன்று உள்ளனர். இந்த நேரத்தில் குழந்தை சரசரவென கீழே விழும்படி வந்துள்ளது.

இந்த சூழலில், கீழ் வீட்டின் ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர், குழந்தையை ஒற்றைக் கையில் லாவகமாக பிடித்து தூக்கி காப்பாற்றினர். இதனால், அந்த குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது. அதன் பின்னர் தான் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இது யாருடிய குழந்தை எனும் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. நெஞ்சை பதற வைத்த இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

(Visited 34 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!