வாழ்வியல்

கடுமையாகும் வெயில்: சோர்வு, மயக்கம் ஏற்படாமல் – மக்களுக்கு எச்சரிக்கை

வெப்ப நிலை அதிகரிக்கும்போது, நமது உடல் வரட்சியடைந்து, நீரிழப்பு ஏற்படும். இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் நாம் தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதுதான். இந்நிலையில் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடித்தால், நமக்கு நீரழப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம்.

வெப்ப நிலை அதிகரிக்கும்போது, அதிக வியர்வை வெளியாகும். நீண்ட நேரம் சூரிய கதிர்கள் பட்டால், உடல் பயிற்சி நீண்ட நேரம் செய்தால் நமக்கு நீரழப்பு ஏற்படலாம்.

இந்நிலையில் நீரழப்பின் அறிகுறியானது சோர்வு, மயக்கம், வரண்ட வாய், சிறுநீர் கழிக்கும்போது குறைந்த அளவில் நீர் வெளியாகும்.

இந்நிலையில் நீரழப்பு ஏற்படாமல் தடுக்க, தண்ணீரில் சிறிய அளவு உப்பு சேர்த்து குடிக்கலாம் என்று கூறப்படுகிறது. உப்பில் சோடியம் க்ளோரைடு உள்ளது.

இவை நமது உடலில் உள்ள திரவத்தின் அளவை சீராக்க உதவும். நமக்கு வியர்வை வெளியாகும் போது, தண்ணீருடன், எலட்ரோலைட் ஆனா சோடியம் சேர்ந்து வெளியாகும். இந்நிலையில் நாம் உப்பை சேர்ப்பதால், நமது உடல் இழந்த தண்ணீரை மீண்டும் பெற உதவும்.

இந்நிலையில் சிறுநீரகம் தொடர்பாக பிரச்சனை இருப்பவர்கள் உப்பை எடுத்துகொள்ள கூடாது. மேலும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

இதனால் அனைவருக்கும் இது சரியான ஒன்று என்று கூற முடியாது. இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாதவர்கள் ஒரு சிட்டிகை உப்பு தண்ணீரில் சேர்த்துகொள்ளலாம்.

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!