உலகம் செய்தி

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது தாக்குதல்

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்நிலை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென்சீனக் கடலில் உள்ள தாமஸ் ஷோல் அருகே வந்த பிலிப்பைன்ஸ் கப்பலின் மீது சீனா இத்தகைய நீர்த் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ் கப்பலின் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் கப்பலும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், தென் சீனக் கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிலிப்பைன்ஸ் தனது பிராந்திய கடற்பரப்பைப் பயன்படுத்த தமக்கு உரிமை உண்டு என்றும் சீனா அதனை மீற முடியாது என்றும் கூறுகிறது.

எனவே, தனது நாட்டுக்கு எதிரான சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இராஜதந்திர மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அமெரிக்காவிடம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!