உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!! போலாந்து வான் பரப்பை எல்லை மீறிய ஏவுகணை

இன்று, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
உக்ரைன் நேரப்படி அதிகாலை 05:00 மணி முதல் ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் தலைநகரில் பல வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா ஏவிய ஏவுகணை தனது வான் எல்லையை மீறியதாக போலந்து கூறியுள்ளது.
போலந்து தனது வான் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தி பல போர் விமானங்களை பறக்க அனுப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போலந்து நேட்டோவில் உறுப்பு நாடாக உள்ளமை குறிப்பிடத்தககது.
(Visited 17 times, 1 visits today)