ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலாகும் இரட்டை பிரஜாவுரிமை சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

ஜெர்மனியில் அடுத்த மாதம் முதல் இரட்டை பிரஜாவுரிமை சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்த புதிய சட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பல வெளிநாட்டவர் காரியாலயங்களில் இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்வதற்காகவும் நியமனங்களுக்காகவும் காத்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோட்மூன் நகரத்தில் உள்ள வெளிநாட்டவர் காரியாலயத்தில் இவ்வாறு 8000க்கும் மேற்பட்டவர்கள் தங்களது இந்த இரட்டை பிரஜா உரிமைக்குரிய விண்ணப்பத்தை வழங்குவதற்காக நியமனங்களுக்காக காத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் இரட்டை பிரஜா உரிமையை பெற ஆர்வம் காட்டி வருகின்றார்கள் என்றும், இதேவேளையில் பல வருடங்கள் இவர்கள் வெளிநாட்டு காரியாலயங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!