செய்தி

சிங்கப்பூர் நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மட்டும் மொத்தம் 326,970 சீன சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சிங்கப்பூர் சுற்றுலா கழகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப். மாதத்தோடு ஒப்பிடுகையில், சிங்கப்பூருக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இது எட்டு மடங்கு அதிகமாகும்.

கடந்த பிப்ரவரி 9 முதல் நடைமுறைக்கு வந்த இரு நாடுகளுக்கும் இடையிலான 30 நாள் விசா இல்லா பயண ஏற்பாடும் இதற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்தோனேசியா (190,760 பயணிகள்), மலேசியா (100,200 பயணிகள்), ஆஸ்திரேலியா (79,570 பயணிகள்) மற்றும் பிரித்தானியா (69,920 பயணிகள்) ஆகிய நாடுகள் உள்ளன.

மொத்தத்தில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 1.44 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.

அவர்கள் சராசரியாக 3.46 நாட்கள் இங்கு தங்கியிருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content