பங்களாதேஷில் மருத்துவ கல்லூரியில் துப்பாக்கிச்சூடு : மாணவர் ஒருவர் படுகாயம்!
பங்களாதேஷில் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டை அந்த கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் மேற்கொண்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
டாக்டர் ரைஹான் ஷெரீப்பை கைது செய்யக் கோரி மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து குறித்த வைத்தியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
குறித்த மருத்துவக் கல்லூரியில் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இதன்போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)





