இலங்கையில் அதிர்ச்சி – பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)