விடுதலையானவுடன் பிரிட்டனை விட்டு வெளியேறிய ஜூலியன் அசாஞ்சே : விக்கிலீக்ஸ்
பிரிட்டனில் ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவருக்கும் அவரது மனைவி ஸ்டெல்லா ஜூன் 24ஆம் திகதி நன்றி தெரிவித்தார். லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெல்மார்ஷ் உயர்-பாதுகாப்புச் சிறைச்சாலையிலிருந்து அசாஞ்சே வெளியேறியது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, “ஜூலியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்!!!” என்று எக்ஸ் தளத்தில் ஸ்டெல்லா பதிவிட்டுள்ளார்.“உலகளாவிய நிலையில் அவரது விடுதலையை வலியுறுத்தி ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் நன்றியின் அளவைச் சொற்களால் விவரிக்க இயலாது,” […]













