ஐரோப்பா

பிரித்தானியாவில் முதல் தரவு மையத்தை உருவாக்கும் Google – 790 மில்லியன் பவுண்ட் முதலீடு

  • January 22, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் Google தனது முதல் தரவு மையத்தை உருவாக்க 790 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்துள்ளது. ஹெர்ட்போர்ட்ஷையரில் உள்ள வால்தம் கிராஸில் 33 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவடையும் என நம்புவதாகவும் தொழில்நுட்ப நிறுவனமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எத்தனை வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறுவது மிக விரைவில் ஆனால் அதற்கு பொறியாளர்கள், திட்ட மேலாளர்கள், தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்கள், எலக்ட்ரீஷியன்கள், கேட்டரிங் மற்றும் பாதுகாப்பு […]

செய்தி

இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – பசிலின் கோரிக்கைக்கு ரணில் இணக்கம்

  • January 22, 2024
  • 0 Comments

எதிர்வரும் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொளள்ப்படவுள்ளதாக அரசாங்க  தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திருத்ததத்தின் போது பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனித் தனியாக இருக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை காட்டி இந்த திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சர்வதேச […]

ஆசியா

சிங்கப்பூர் வாடகை வீடுகளில் இருந்த நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

  • January 22, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் வாடகை வீடுகளில் இருந்த சுமார் 400 குடும்பங்கள் புதிய வீடுகளுக்குச் சென்றுள்ளன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இடமாற்றத் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய குடியிருப்புப் பேட்டைகளைப் புதுப்பிப்பதற்கான திட்டத்தின் ஓர் அங்கமாக அவர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சிறந்த வீடுகளையும் வசதிகளையும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கவேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எடுத்துக்காட்டாக, தோ பாயோ லோரோங் 5இல் வாடகை வீடுகள் கொண்ட புளோக்குகள் 29, 31இன் குடியிருப்பாளர்கள் திட்டத்தின்படி கடந்த ஆண்டு மே […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் குழு மோதலில் சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • January 22, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஜனவரி மாதம் 17ஆம் திகதி மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை குழு மோதல் ஒன்று இடம்பெற்றது. பதின்ம வயதுடைய சிறுவர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதன் போதே குறித்த 14 வயதுடைய சிறுவன் மீது வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மிக துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை என்றபோதும், சிறுவன் சம்பவ இடத்திலேயே […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் பெறுபவர்களுக்கு வெளியான தகவல்

  • January 22, 2024
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் குறைக்கப்படுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை குறைக்க வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதாக எதிர்க்கட்சியான CDUCSE கட்சி கடந்த காலங்களில் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது. அதாவது எதிர்வரும் சனிக்கிழமை இவர்களது கட்சி கூட்டத்தின் பொழுது இந்த விடயம் தொடர்பான சில பிரரணைகளை இயற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேவேளையில் CDU கட்சியுடைய செயலாளரான காசல் லிண்டம் […]

இலங்கை

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • January 22, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த நேரத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடு இக்கட்டான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கை நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

திருகோணமலையில் யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

  • January 21, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செம்பி மொட்டை அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப் (68வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிக்குள் சென்று மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கி விழுந்து கிடந்த […]

இலங்கை செய்தி

வற் வரி இல்லாத் பொருட்களை விற்பனை செய்ய விசேட கடைகளை ஆரம்பிக்க அமைச்சர் திட்டம்

  • January 21, 2024
  • 0 Comments

வற் இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சித் தொடரில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தமது அமைச்சின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இயங்கக்கூடிய பல இடங்கள் உள்ளதால், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை […]

இலங்கை செய்தி

ஸ்ரீ பாத மலைக்கு யாத்திரை சென்ற அமெரிக்க தூதுவர்

  • January 21, 2024
  • 0 Comments

புனித யாத்திரைகள் மற்றும் சாகசங்களை விரும்பும் மக்களுடன் தான் அண்மையில் ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு விஜயம் செய்ததாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார். ஸ்ரீ பாத மலையின் இயற்கை அழகையும், வரலாற்று முக்கியத்துவத்தையும், அனைத்து மதத்தினரும் ஸ்ரீ பாதத்தின் மீது காட்டும் மரியாதையை மனதில் கொண்டு, ஸ்ரீ பாத மலையில் ஏறியதாகவும், ஸ்ரீ பாத மலையில் ஏறுவது சவாலானதாகவும், ஆனால் சூரிய ஒளியைக் கண்டு அந்த சவாலை முறியடித்ததாகவும் கூறினார். ஸ்ரீ பாத மலையேற்றத்தின் சிறந்த […]

உலகம் செய்தி

நியூசிலாந்தில் திருட்டில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

  • January 21, 2024
  • 0 Comments

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 42 வயதான கோல்ரிஸ் கஹ்ராமன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஆவார். ஈரானியப் பெண்ணான இவர், 2017ஆம் ஆண்டு அகதி விசா மூலம் நியூசிலாந்துக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினரான முதல் பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு துணி வியாபாரம் சம்பந்தமாக பல […]

error: Content is protected !!