Site icon Tamil News

கொழும்பில் புகைப்படத்தால் விபரீதம் – மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர்

பாணந்துறையில் நிர்வாண படத்தை கள்ளக்காதலனுக்கு அனுப்பினார் எனக் கூறப்படும் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டரை அடி நீளமான வாளுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் மனைவி, தான் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபருக்கு அவரின் நிர்வாண புகைப்படத்தை வட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளதை தெரிந்து கொண்ட பின்னர் , இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமுற்றிருந்த கணவர் நேற்று முன்தினம் மாலை மனைவியின் வீட்டுக்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் வாளை எடுத்துச் சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து உடனடியாக செயல்பட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த இரண்டரை அடி நீளமான வாளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை, மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் என்றும் இவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version