Site icon Tamil News

WhatsApp காதலால் விபரீதம் – சிறுமிக்கு நேர்ந்த கதி

கண்டியில் WhatsApp மூலம் ஏற்பட்ட நட்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வட்ஸ் அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  சிறிது காலம் மேற்படி வட்ஸ் அப் காதல் நீடித்துள்ளது.

அண்மையில் மேற்படி சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை நபர் சிறுமியை ஏமாற்றி  கண்டி கெட்டம்பே பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உற்படுத்தியுள்ளார். பின்னர் அந்நபர் தலைமறைவாகி உள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைளக்காக கண்டி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version