ஜெனீவாவில் மீண்டும் சந்திக்கும் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள்!
அமெரிக்காவுடனான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் சார்பான தூதுக்குழு இன்று ஜெனீவாவிற்கு புறப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் நாளைய தினம் ஜெனீவாவில் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) தலைமையிலான தூதுக்குழுவினரை சந்திக்கவுள்ளனர்.
இஸ்லாமியக் குடியரசின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவத் திறனை அதிகரித்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும் சுமூகமான தீர்வுகள் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




