Tamil News

திருகோணமலை – 2022ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ். குகதாசன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

கணிதம்,உயிரியல் விஞ்ஞான,பொறியியல் தொழில்நுட்ப ,விஞ்ஞான தொழில்நுட்ப, கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடங்களைப்பெற்ற மூவின மாணவர்கள் ஆறு பேருக்கும்,2021 ம் ஆண்டு இவ் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 41 மாணவர்களுக்கும் , நிலைகளைப்பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபா.25,000/00 நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டது

2021 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 41 மாணவர்களின் கற்கை நெறி நிறைவடையும் வரை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூபா 25000/00 தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது என சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாசன் தெரிவித்தார்.

 

Exit mobile version