இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை கடுமையாக்கப்படும் சட்டம்

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை அனைத்து தேர்தல் சட்டங்களும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் ஊக்குவித்தல் அல்லது பதவி உயர்வுகள் வழங்கக் கூடாது.
ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களை தடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கிகளை பயன்படுத்த பொலிஸார் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
அரச நிறுவனங்களையும், அரச அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது.
மேலும் வாக்குகளைப் பெற லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கைத் தவிர்க்க வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 51 times, 1 visits today)