‘மத்திய கிழக்கு போர்’ – இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம்!
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 35 ஆயிரத்து 330 பேரும், பிரிட்டனில் இருந்து 12 ஆயிரத்து 599 பேரும், ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரத்து 927 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]












