உலகம் செய்தி

ஈரான் விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விசேட கூட்டம்!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (27) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இந்த விடயம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என தெரியவருகின்றது. தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது. ஈரானின் தற்போதைய பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

G7 மாநாட்டில் ‘மத்திய கிழக்கு போர்’ குறித்து ஆராய்வு: இந்தியாவும் பங்கேற்பு!

  • March 27, 2026
  • 0 Comments

G7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். G7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய கூட்டம் நேற்று ஆரம்பமானது. இன்றும் கூட்டம் நடைபெறுகின்றது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுவருகின்றது. G7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், பிரான்ஸ் விடுத்த அழைப்பின் […]

உலகம் செய்தி

சர்வதேச அணுசக்தி முகமை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானின் புஷெர் Bushehr அணுமின் நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலையடுத்து, சர்வதேச அணுசக்தி முகமை The International Atomic Energy Agency (IAEA) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் அதிகளவிலான கதிரியக்கப் பொருட்கள் இருப்பதால், ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது ஈரானுக்குள்ளும் அண்டை நாடுகளிலும் பெரிய அளவிலான கதிரியக்க விபத்தை உண்டாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு பேரழிவைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் மிக உயர்ந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய […]

இலங்கை உலகம் செய்தி

ஆசியான் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?

  • March 27, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஆசியான் (ASEAN) உச்சிமாநாடு மிகவும் சுருக்கமான முறையில் நடத்தப்படும்.” இவ்வாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் Ferdinand Marcos Jr அறிவித்துள்ளார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் எரிபொருள் விநியோகம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் தேவையற்ற […]

உலகம் செய்தி

10 ஆயிரம் படைகளை மத்திய கிழக்கில் களமிறங்கும் ட்ரம்ப்: நடக்கப்போவது என்ன?

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்படும் சூழ்நிலையிலேயே இவ்வாறான ராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 வீரர்களுடன், தற்போது புதிதாகச் செல்லவிருக்கும் படையில் காலாட்படை மற்றும் கவச வாகனங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. இவர்கள் எங்கு நிலைகொள்வார்கள் என்பது பற்றிய […]

ஆஸ்திரேலியா செய்தி

வளைகுடாவுக்கு கண்காணிப்பு விமானத்தை அனுப்பியது ஆஸ்திரேலியா!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போருக்கு ராணுவ உதவி வழங்கவில்லை என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் Donald Trump குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய Australia அரசாங்கம் மறுத்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து தங்களுக்கு முறையான கோரிக்கைகள் எதுவும் இதுவரை வரவில்லை என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் Richard Marles தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆஸ்திரேலியா தனது E-7A வெட்ஜெடைல் கண்காணிப்பு விமானத்தை வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் […]

செய்தி விளையாட்டு

ஈரான் அணிக்கு அமெரிக்கா அழைப்பு!

  • March 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் வீரர்கள் அமெரிக்கா வருவது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை அமெரிக்கா வரவேற்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஆண்ட்ரூ கியூலியானி தெரிவித்துள்ளார். போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் விடுத்த கோரிக்கையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நிராகரித்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரங்களில் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறானதொரு […]

இலங்கை செய்தி

ரவிராஜ் படுகொலை: வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவ

  • March 27, 2026
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, நீதியரசர்களான பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று (28) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது, அவரது […]

உலகம் செய்தி

ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் கெடு!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஏற்கனவே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என அவர் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு உண்மையான நண்பனாக ரஷ்யா துணை நிற்கும்: அந்நாட்டு பிரதி அமைச்சர் உறுதி!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக […]

error: Content is protected !!