இலங்கை செய்தி

” வடக்கு ஆளுநரை நேரடியாகவே பாடசாலைக்கு வரவைத்த மாணவனின் பெறுபேறு”

  • April 1, 2026
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று (01.04.2026) கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு நேரடியாகப் பயணம் செய்த ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோரைப் பாடசாலை அதிபர் திருமதி ஐ.நிமல்ராஜ் வரவேற்றார். இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: புதிய விதிகளை பின்பற்றுமாறு ஈரான் வலியுறுத்து!

  • April 1, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தொடர்பான புதிய விதிகளை ஈரானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எப்ராஹிம் அசிசி Ebrahim Azizi அறிவித்துள்ளார். ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய நீண்டகாலப் பொறுமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அந்த கடல்வழியைப் பயன்படுத்துவோர் ஈரானின் புதிய சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடல்சார் விதிகளில் ஈரான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ட்ரம்ப் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இங்குதான் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு […]

இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு ‘அரசியல் பலப்பரீட்சை’! ஆளுங்கட்சி கூறுவது என்ன?

  • April 1, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ Kumara Jayakody தெரிவித்தார். எரிசக்தி அமைச்சர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி மோசடி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக் கொண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ குமார ஜயகொடி தற்போதைய பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார். அரச உர […]

உலகம் செய்தி

“போரில் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டோம்”

  • April 1, 2026
  • 0 Comments

தற்போதைய சூழலில் மோதல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio நம்பிக்கை வெளியிட்டார். ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தயாராக இருந்தாலும், காலதாமதம் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போலி பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்று அவர் எச்சரித்துள்ளார். அதேவேளை, நேட்டோ கூட்டமைப்பு இன்னும் அமெரிக்காவின் நலன்களுக்குப் பயன்படுகிறதா என்பதை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக […]

உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சி: 5 அம்ச திட்டத்தை முன்வைத்தது சீனா!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம் என சீனா கருதுகிறது. கடந்த காலங்களில் மத்திய கிழக்கில் சமாதான தூதுவராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டு, பெய்ஜிங் தற்போது இந்த அமைதி முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு மாற்றாகத் தன்னை ஒரு நடுநிலையான அமைதித் தரகராக […]

இலங்கை செய்தி

சமஷ்டிக் கொள்கையை கைவிட்டதா தமிழரசுக் கட்சி?

  • April 1, 2026
  • 0 Comments

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டியை […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து அவர் கருத்து வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பிரதமர் இன்று விசேட உரை!

  • April 1, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese அந்நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு அவரது உரை இடம்பெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள விளைவுகளைக் கையாளும் அரசாங்கத்தின் நான்கு கட்டத் திட்டத்தை அவர் விளக்கவுள்ளார். பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியால் எரிபொருள் இருப்பு குறைந்தாலும், நாட்டின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாக அரசு உறுதியளிக்கிறது. அத்தியாவசியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கும் […]

உலகம் செய்தி

போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் அறிவிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று கூறினார். இந்தப் போரை நிறுத்துவதற்கு ஈரான் எவ்வித முன்நிபந்தனைகளையும் அல்லது உடன்படிக்கைகளையும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி […]

உலகம் செய்தி

வளைகுடா நாடுகளுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குகிறது பிரிட்டன்!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி John Healey அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளுடனான பிரித்தானியாவின் உறுதியான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில், கத்தாரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய போர் விமானங்கள் தொடர்ந்து அங்கு இயங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனது நாடு கூட்டாளிகளுடன் எப்போதும் துணை […]

error: Content is protected !!