இந்தியா செய்தி தமிழ்நாடு

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’!

  • April 3, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.கவின் BJP வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு இடமளிக்கப்படாமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலானோர் கணித்தபடியே வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், எவரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலைக்கு ‘வெட்டு’ விழுந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தேர்தலுக்கான தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் இம்முறை நயினார் நாகேந்திரன், எல்.முருகனின் கையே ஓங்கியிருந்தது. இதனால், அவர்கள் அண்ணாமலைக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப் பெறாமல் இருந்துவிட்டனர் என்று அவரின் ஆதரவாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். […]

உலகம் செய்தி

ஈரானின் ராணுவ வலிமை அழியவில்லை: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

  • April 3, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிடம் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆளில்லா விமானங்கள் எஞ்சியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு சிதைக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு மாறாக உளவுத் தகவல்கள் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும்: ஈரான் சபதம்!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும் என்று ஈரான் இராணுவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தினால், அதற்குப் பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தொடர்புள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள நாடுகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் முக்கியப் பாலத்தை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ள நிலையிலேயே ஈரான் […]

இலங்கை செய்தி

வடக்கில் பிரதான இரு செயல்திட்டங்கள்: உலக வங்கி அனுமதி!

  • April 3, 2026
  • 0 Comments

உலக வங்கியின் நிதியுதவியுடன் ‘ரிவைவ்’ (REVIVE) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை இன்று (03) சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த முதற்கட்டத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் இறங்குதுறை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டை ஆகிய இரு இடங்களையும் மையப்படுத்திய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே உலக வங்கியால் […]

உலகம் செய்தி

“பாலம்மீதான தாக்குதல் எதிரணியின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது”

  • April 3, 2026
  • 0 Comments

“முற்றுப்பெறாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சொந்தமான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது.” இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார். இப்படியான தாக்குதல்கள் நிலைகுலைந்துபோன ஒரு எதிரியின் தோல்வியையும், தார்மிக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானின் மிகப்பெரிய பாலத்தை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் 15 Hezbollah அமைப்பினர் பலி!

  • April 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் Hezbollah அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவ திட்டமிட்டிருந்த குழுவினரை அடையாளம் கண்டு அழித்ததாக இஸ்ரேல்ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருந்த துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை Hezbollah அமைப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இரு தரப்பிற்கும் இடையே நிலவும் இந்த மோதல் சூழலை இஸ்ரேலிய இராணுவ செய்தித் […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகளுக்கே அஞ்சாதவர்கள்தான் இலங்கை புலனாய்வாளர்கள்: மார்தட்டுகிறார் நாமல்!

  • April 3, 2026
  • 0 Comments

“போர் காலத்தில் புலிகளுக்கே அஞ்சாத இலங்கை புலனாய்வாளர்கள், இந்த ஆட்சியாளர்களுக்கு அஞ்சமாட்டார்கள்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உதய கம்மன்பில புத்தகம் வெளியிட்டுள்ளார். அது தொடர்பில் நாமும் ஆராய்ந்தோம். சில விடயங்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, விசாரணைகளை வேறு வழியில் கொண்டுசெல்வதற்கு ஆளுங்கட்சி முயற்சிக்கின்றது. அச்சுறுத்தி […]

உலகம் செய்தி

அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!

  • April 3, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump , தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர் பதவியை வகித்துவந்தார். Jeffrey Epstein தொடர்பான கோப்புகளை கையாண்ட விதம் குறித்து Pam Bondi அண்மையில் கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டார். டிரம்ப் அவரைப் பாராட்டிப் பேசினாலும், கடந்த சில வாரங்களில் பதவியை இழந்த இரண்டாவது முக்கிய அதிகாரி […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பஹ்ரைன் Bahrain முன்மொழிந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (03) வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அது நாளைவரை (04) பிற்போடப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேவையான தற்காப்பு வழிமுறைகளை பயன்படுத்த மேற்படி பிரேரணைமூலம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும், பலவந்தமான நடவடிக்கைகளை உள்ளடக்கிய எந்தவொரு […]

உலகம் செய்தி

போரை முடிக்க களமிறங்குகிறது ரஷ்யா!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் Vladimir Putin தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். எகிப்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா அனைத்து முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனப்தையும் ரஷ்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!