இலங்கை செய்தி

NPP ஆட்சியில் அமைச்சரொருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

  • March 28, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி Kumara Jayakody மீதான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் Colombo High Court நேற்று குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அழைப்பாணைக்கு இணங்க, குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடி நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் குற்றச்சாட்டுகள் அடங்கிய பத்திரம் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் குமார ஜயகொடியை, தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பேரின் பிணையில், விடுவிக்குமாறு நீதிமன்றம் […]

உலகம் செய்தி

FBI இயக்குனரின் Email: ஈரான் ஆதரவுக்குழு சைபர் தாக்குதல்!

  • March 28, 2026
  • 0 Comments

ஈரான் ஆதரவுடைய ஹந்தாலா (Handala) என்ற ஹேக்கர் குழு, அமெரிக்க FBI தலைவர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சலை ஊடுருவித் தகவல்களைத் திருடியுள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தும் பழையவை என்றும், இதில் அரசாங்க ரகசியங்கள் எதுவும் இல்லை என்றும் FBI செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், , லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட விபரங்களையும் தாங்கள் திரட்டிவிட்டுள்ளதாக Handala ஹேக்கர் குழு உரிமை கோரியுள்ளது. தங்களை பாலஸ்தீன ஆதரவாளர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும் இந்தக் குழு, […]

உலகம் செய்தி

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை வெற்றியை நோக்கி!

  • March 28, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் பெரும் வெற்றியை ஈட்டி வருகின்றது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். Miami இல் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பொருளாதாரத் தடைகளால் ஈரான் ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் தற்போது அமைதி உடன்படிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய கிழக்கு போரில் சவூதி அரேபியா வழங்கிய வலுவான ஆதரவைப் பாராட்டிய ட்ரம்ப், நேட்டோ நாடுகளின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

விளையாட்டு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை

  • March 28, 2026
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 341 ஓட்டங்களைப் பெற்றது. இதன்மூலம் கரீபியன் மண்ணில் தனது அதிகபட்ச ஸ்கோரை ஆஸ்திரேலிய மகளிர் அணி (341) பதிவு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் Stafanie Taylor அதிரடியாக விளையாடி சதம் அடித்தபோதிலும், அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 50 ஓவர்கள் […]

விளையாட்டு

IPL கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்!

  • March 28, 2026
  • 0 Comments

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த IPL T-20 கிரிக்கெட் தொடர் இன்று (28) ஆரம்பமாகின்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) , சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகியன மோதுகின்றன. இம்முறை தொடரில் ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இதுவரை பட்டம் வெல்லாத டெல்லி […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் வெடிப்பு!

  • March 28, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக டொனால்ட் ட்ரம்புக்கு donald trump அமெரிக்காவில் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. “நோ கிங்ஸ்” (No Kings) என்ற மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை பாரிய போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000 இடங்களில் நடைபெறவுள்ள இப்போராட்டங்களில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் […]

இலங்கை உலகம் செய்தி

சவூதி விமானப்படைதளம்மீது ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க படையினர் காயம்!

  • March 28, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் Prince ⁠Sultan விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 29 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் என்பன கூட்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீதும் தாக்குதல் நடத்திவருகின்றது. இந்நிலையிலேயே சவூதியில் மேற்படி தளம் தாக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த நான்கு வாரங்களாக […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர்: பலியானோர் எண்ணிக்கை வெளியீடு!

  • March 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் இன்று 28 ஆவது நாளாக தொடர்ந்தது. உயிரிழப்புகள், உடமை இழப்புகள், கட்டிடங்கள் சேதம் என பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதல்களில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் ஈரானில் 1,937 பேர் பலியாகியுள்ளனர். 24,800 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 19 பேர் பலியாகியுள்ளனர். 5,492 பேர் காயமடைந்துள்ளனர். ஏனைய நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை […]

இலங்கை செய்தி

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள தென்னை முக்கோண வலயம் தொடர்பில் ஆராய்வு!

  • March 27, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொதுமுகாமையாளர் ரி.வைகுந்தன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயச் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்தார். 16,000 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்குத் தேவையான தென்னம்பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன […]

உலகம் செய்தி

உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை திசை திருப்ப மத்திய கிழக்கு போரை பயன்படுத்தும் ரஷ்யா

  • March 27, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப ரஷ்யா முயல்வதாகக் ஜேர்மன் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரான்ஸில் நடைபெறும் G7 மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன், ஈரானின் இராணுவத் தாக்குதல்களுக்குத் தேவையான இலக்குகளை அடையாளம் காண புடின் உதவி செய்துவருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தனது குற்றங்களை மறைக்க முயற்சிக்கின்றது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட ஜேர்மன் […]

error: Content is protected !!