மத்திய கிழக்கு போர்ச்சூழல்: IMF குழுவுக்கு அநுர விளக்கம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஐ.எம்.பி. குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து […]













