இலங்கை செய்தி

“நம்பிக்கையில்லாப் பிரேரணை”- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை பதில் பேச்சாளராக விஜித ஹேரத் பங்கேற்றிருந்தார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் […]

இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத்துறை 19.7 வீதத்தால் வீழ்ச்சி!

  • April 8, 2026
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 மார்ச் மாதம் 19.7 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள், போர்ச்சூழலால் தமது பயணத்தை இரத்து செய்தனர். இதனால் சுற்றுலாத்துறையில் முதல் காலாண்டில் இலங்கை நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல்போயுள்ளது. வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டது. 2018 மார்ச் மாதம் இலங்கைக்கு 233,382 […]

இலங்கை செய்தி

“உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம் “

  • April 8, 2026
  • 0 Comments

  உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் (CUBA – Ceylon United Business Alliance) இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் […]

உலகம் செய்தி

மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்!

  • April 8, 2026
  • 0 Comments

மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்! ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தூய்மைப்பணி மற்றும் சீரமைப்பு நடவடிக்கை என்பன முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் தொடர்புடைய Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர்க்கால சிதைவுகளை அகற்றி வீதிகளை மீண்டும் திறக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்காகத் தரையைச் சமன்படுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகரின் இயல்பு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!

  • April 8, 2026
  • 0 Comments

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. போர்ச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் அந்த நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்படுவது இலங்கையின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, […]

விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி?

  • April 8, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் Delhi Capitals , குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans ஆகிய அணிகள் களம் காண்கின்றன. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் Arun Jaitley Stadium இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். அக்சர் படேல் Axar Patel தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்கும் முடிவு கட்டுமாறு ட்ரம்பிடம் மன்றாடுகிறது உக்ரைன்!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும் அமெரிக்கா எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனின் இத்தகைய தீர்க்கமான முடிவுகள் மட்டுமே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தடுத்து அமைதியை நிலைநாட்ட உதவும் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா காட்டும் இந்தத் துணிச்சலை […]

உலகம் செய்தி

நிரந்தர போர் நிறுத்தத்துக்காக பிரிட்டன் களத்தில்: வளைகுடா நாடுகளுக்கு விரைகிறார் பிரதமர்!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார். தற்காலிக அமைதி முயற்சியை ஒரு நிலையான உடன்படிக்கையாக மாற்றுவதற்கு பிரிட்டன் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இதன்ஓர் அங்கமாக பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்வார் என தெரியவருகின்றது. அந்நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கவும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு பிரிட்டன் முழு ஆதரவை வழங்கவுள்ளது. இது […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு கிடைத்த முழு வெற்றி: மார்தட்டுகிறார் ட்ரம்ப்!

  • April 8, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான வெற்றியென ஜனாதிபதி டொனால்;ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையின் மூலம் ஈரானிடம் உள்ள யுரேனியம் சேமிப்புகள் பாதுகாப்பான முறையில் கையாளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற சீனா முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானின் நிலைப்பாடு! அதேவேளை, தமது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதே தங்களின் உறுதியான போராட்டத்திற்கு […]

உலகம் செய்தி

லெபனான்மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளடக்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தினாலும், ஈரான் ஒருபோதும் அணுசக்தி அல்லது ஏவுகணை அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் நோக்கில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது […]

error: Content is protected !!