உலகம் செய்தி

போர் நிறுத்த முயற்சி: 5 அம்ச திட்டத்தை முன்வைத்தது சீனா!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம் என சீனா கருதுகிறது. கடந்த காலங்களில் மத்திய கிழக்கில் சமாதான தூதுவராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டு, பெய்ஜிங் தற்போது இந்த அமைதி முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு மாற்றாகத் தன்னை ஒரு நடுநிலையான அமைதித் தரகராக […]

இலங்கை செய்தி

சமஷ்டிக் கொள்கையை கைவிட்டதா தமிழரசுக் கட்சி?

  • April 1, 2026
  • 0 Comments

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டியை […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து அவர் கருத்து வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பிரதமர் இன்று விசேட உரை!

  • April 1, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese அந்நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு அவரது உரை இடம்பெறவுள்ளது. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள விளைவுகளைக் கையாளும் அரசாங்கத்தின் நான்கு கட்டத் திட்டத்தை அவர் விளக்கவுள்ளார். பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியால் எரிபொருள் இருப்பு குறைந்தாலும், நாட்டின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாக அரசு உறுதியளிக்கிறது. அத்தியாவசியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கும் […]

உலகம் செய்தி

போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் அறிவிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று கூறினார். இந்தப் போரை நிறுத்துவதற்கு ஈரான் எவ்வித முன்நிபந்தனைகளையும் அல்லது உடன்படிக்கைகளையும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி […]

உலகம் செய்தி

வளைகுடா நாடுகளுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குகிறது பிரிட்டன்!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் சவூதி அரேபியா, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி John Healey அறிவித்துள்ளார். வளைகுடா நாடுகளுடனான பிரித்தானியாவின் உறுதியான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில், கத்தாரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய போர் விமானங்கள் தொடர்ந்து அங்கு இயங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனது நாடு கூட்டாளிகளுடன் எப்போதும் துணை […]

உலகம் செய்தி

இறங்கிவர மறுத்தால் ஈரான்மீதான தாக்குதல் தீவிரமாகும்!

  • March 31, 2026
  • 0 Comments

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் Hegseth வலியுறுத்தினார். சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது தாக்குதலின் தீவிரத்தை பலமடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த முப்பது நாட்களில் ஈரானில் 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 11,000 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி டான் கெய்ன் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்கா பெற்றுள்ள வான்வழி […]

அரசியல் இலங்கை செய்தி

சமஷ்டி திட்டத்தை ஒருபோதும் கைவிடோம்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்!

  • March 31, 2026
  • 0 Comments

” எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை” என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு, மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. […]

இலங்கை செய்தி

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது. 1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் […]

இலங்கை செய்தி

25 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 12 பேருக்கு மறியல் நீடிப்பு!

  • March 31, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, மேலும் 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சமயம், கடற்படையினரால் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்று முதல் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். […]

error: Content is protected !!