இலங்கை செய்தி

இலங்கை ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்களின் விசேட அறிவிப்பு

இலங்கையில் ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி இதனை தெரிவித்தார்.

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களில் சிலர் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.

சில பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கிணங்க, கொழும்பு, காலி, குருநாகல், நுவரெலியா, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட அலுவலகங்களை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி குறிப்பிட்டார்.

இதனிடையே, பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content