பொழுதுபோக்கு

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகர் ஜெயச்சந்திரன். 80 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்காக அவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.

பாடகர் ஜெயச்சந்திரன் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தார். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கும்படி அமைந்துள்ளன. இன்றும் இவரது பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாடகர் ஜெயச்சந்திரன் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 49 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!