ஐந்து வருடத்தில் 17 பில்லியன் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி!
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் ஐந்து வருடங்களில் 17 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி மொத்த வெளிநாட்டு கடன்களான 41.5 பில்லியன் டொலர்களில் 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு கடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி […]













