இலங்கை

கந்தளாய் பிரதேசத்தில் சரிந்த தொலைத்தொடர்பு கோபுரம் – ஐவர் படுகாயம்

  • July 4, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த. தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.குறித்த சம்பவம் இன்று (04) பிற்பகல் இடம் பெற்றுள்ளது. வேகமாக வீசிய காற்றினால் கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ் எல் டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரமே தபால் கந்தோர் அலுவலகத்தில் விழுந்துள்ளதாகவும் அங்கு கடமையாற்றிய ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. காயமடைந்த ஐந்து பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். […]

ஐரோப்பா

நோயாளியுடன் நெருக்கமாக இருந்த தாதி … உயிரிழந்ததால் விதிக்கப்பட்டுள்ள தடை

  • July 4, 2023
  • 0 Comments

நோயாளி ஒருவர் பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவருடன் இரகசிய உறவு வைத்திருந்திருக்கிறார் ஒரு செவிலியர்.இருவரும் நெருக்கமாக இருக்கும்போது திடீரென அந்த நோயாளி உயிர் பிரிந்ததையடுத்து அந்த பெண் செவிலியராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டிலுள்ள Wrexham என்னுமிடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றிவந்தவர் Penelope Williams.அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருடன் Penelopeக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஓராண்டாக நெருங்கிப் பழகிவந்துள்ளார்கள். இந்நிலையில், ஒரு நாள் இரவு, மருத்துவமனையின் […]

இலங்கை

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் – அருட்தந்தை மா.சத்திவேல் அறிக்கை

  • July 4, 2023
  • 0 Comments

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவர் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார் அவ் அறிக்கையில் மேலும் அவர்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் சமூக கௌரவத்துக்கு உரியவர்கள். தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக விதையானோர் வரலாற்றுக்குரியவர்கள் மட்டுமல்ல அவர்களே எதிர்கால வரலாற்றினை உயிராகவும், உயிர்பாகவும் வைத்திருப்பவர்கள் என்பதற்கு மாற்று கருத்தும் இல்லை. வீரம் நிறைந்த வரலாற்றை வாழவைக்கும் பொறுப்பு […]

பொழுதுபோக்கு

நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் இது… செல்வராகவன் டுவிட்

  • July 4, 2023
  • 0 Comments

மாமன்னன் படத்தில் வரும் நெஞ்சமே நெஞ்சமே பாடலைக் கேட்டு மயங்கி இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை வெகுவாக புகழ்ந்துள்ளார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு,பகத் பாசில், கீர்த்தி சுரேஷ்,ரவீனா,லால், விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் திரைப்படம் வெளியாகும் முன்பே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் மாரி செல்வராஜின் முந்தைய […]

இந்தியா

படுத்திருந்த மெத்தை வெடித்ததால் நபர் ஒருவர் பலி!

  • July 4, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் ஸ்மிட் நகரில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்து பார்த்தபோது நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட […]

இலங்கை

வவுனியா நகரசபையில் இன்று புதிய செயலாளர் நியமனம்.

  • July 4, 2023
  • 0 Comments

வவுனியா நகர சபையின் செயலாளராக கடமையாற்றிய இ.தயாபரன் வேறு திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து தற்காலிக செயலாளர் மூலம் இயங்கி வந்தது. வெற்றிடமாக காணப்பட்ட இப் பதவிக்கு புதிதாக செயலாளர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய செயலாளராக கடந்த நான்கு வருடங்களாக செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றி வந்த பூ.செந்தில்நாதன் வவுனியா நகரசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் (04) உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட அமெரிக்கா

தன் 99வது பிறந்த நாளை ஸ்கை டைவிங் செய்து கொண்டாடிய மூதாட்டி!

  • July 4, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 99 வயதான மூதாட்டி ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் நோக்கில் விமானத்திலிருந்து குதித்துள்ளார். பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபடும் விருப்பத்தை கொண்ட லக்கி கோயிங் வயோதிபப் பெண் ஸ்கை டைவிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார் .அந்த வகையில் தனது 99வது பிறந்த நாளை முன்னிட்டு பூமியிலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். இந்த அனுபவம் அலாதியானது எனவும் இது […]

வட அமெரிக்கா

சான்-பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு; அமெரிக்கா கடும் கண்டனம்

  • July 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் திகதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதனால், அப்பகுதி முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் பின்னர் தீயணைப்பு படையினர் […]

இலங்கை

யாழ் புத்ர் தாக்குதல் சம்பவம் ; 24 சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

  • July 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில், கைதான 28 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 9 பேரை எதிர்வரும் ஜூலை 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது. சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரின் படங்களை கணிணி ஊடாக செம்மையாக்கம் செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக […]

புகைப்பட தொகுப்பு

மன்னாருக்குள் எந்த ஒரு மதுபான சாலைகளும் வேண்டாம்

  • July 4, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை(04) மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பிரஜைகள் குழு,மகளீர் அமைப்புக்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த போராட்டம் நகர பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை இடம் பெற்றது. மன்னாரில் கத்தோலிக்க இந்து ஆலயங்கள்,பாடாசாலை மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு […]

error: Content is protected !!