கந்தளாய் பிரதேசத்தில் சரிந்த தொலைத்தொடர்பு கோபுரம் – ஐவர் படுகாயம்
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த. தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.குறித்த சம்பவம் இன்று (04) பிற்பகல் இடம் பெற்றுள்ளது. வேகமாக வீசிய காற்றினால் கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ் எல் டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரமே தபால் கந்தோர் அலுவலகத்தில் விழுந்துள்ளதாகவும் அங்கு கடமையாற்றிய ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. காயமடைந்த ஐந்து பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். […]













