இலங்கை செய்தி

திருகோணமலையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் விபரம்

  • December 6, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 86 ஆயிரத்து 313 பேர் பாதிப்ப!! திருகோணமலை மாவட்டத்தில் இதுவரைக்கும் 86 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார  தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (06) வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 216 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் 25981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூதூர் பிரதேசத்தில் 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 9530 குடும்பங்களைச் சேர்ந்த 31835 பேர் […]

இலங்கை செய்தி

மூதூரிற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு திருத்த பணி ஆரம்பம்

  • December 6, 2025
  • 0 Comments

திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணியில் இராணுவத்தினர் பிரதேச மக்கள் நீர் வளங்கள் அதிகார சபையினர் குறித்த திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கட்டைபறிச்சான் மூதூர் அம்மன்நகர் கங்குலேலி உள்ளிட்ட அண்மைக் கிராமங்களில் உள்ள மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

இலங்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • December 6, 2025
  • 0 Comments

இன்று (04) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை […]

இலங்கை

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார். இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

  • December 6, 2025
  • 0 Comments

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதி உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளுக்காக நிதிகோரி முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்காகவே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், குறைநிரப்பு பிரேரணைக்கு […]

அரசியல் இலங்கை

அவசரகால சட்டத்தை அடக்குமுறை ஆயதமாக பயன்படுத்தவில்லை: ஜனாதிபதி விளக்கம்!

  • December 6, 2025
  • 0 Comments

மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது […]

இலங்கை

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் கோர விபத்தை ஏற்படுத்திய லொரி

  • December 6, 2025
  • 0 Comments

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை திசையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி வேகமாக வந்த லொரி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனங்களுடன் மோதிய லொரி ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக […]

செய்தி விளையாட்டு

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐசிசி

  • December 5, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஆண்களுக்கான வீரர் விருதுக்கான தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில், தென் ஆப்பிரிக்காவின்(South Africa) சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர்(Simon Harmer மற்றும் பங்களாதேஷின்(Bangladesh) தைஜுல் இஸ்லாம்(Taijul Islam) மற்றும் பாகிஸ்தானின்(Pakistan) முகமது நவாஸ்(Mohammad Nawaz) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு(India) எதிரான டெஸ்ட் தொடரில் 8.94 என்ற சராசரியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஹார்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அயர்லாந்துக்கு(Ireland) எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் […]

இலங்கை செய்தி

அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – இராமநாதன் அர்ச்சுனா

  • December 5, 2025
  • 0 Comments

அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். “ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அந்த வாகனம் எனக்கு தேவையில்லை. மக்கள் பரிதவிக்கும் போது வாகனம் எதற்கு? எனது வாகனத்துக்குரிய பணத்தை மலையக மக்களுக்கு வழங்கவும். வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை கொண்டுவருவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என்று அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. தனது உரையின்போது […]

உலகம் செய்தி

உயர் மருத்துவ சிகிச்சைக்காக கலீதா ஜியாவின் லண்டன் பயணம் ஒத்திவைப்பு

  • December 5, 2025
  • 0 Comments

வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியாவின்(Khaleda Zia) மருத்துவ விமானம் தாமதமானதாலும் அவரது உடல்நிலை சிறிது மோசமடைந்ததாலும் மேம்பட்ட சிகிச்சைக்காக லண்டனுக்குச் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல்(Mirza Fakhrul) தெரிவித்துள்ளார். இந்நிலையில், வங்காளதேச ஊடக நிறுவனமான UNBயிடம் பேசிய மிர்சா ஃபக்ருல், கத்தார்(Qatar) எமிரால் வழங்கப்பட்ட சிறப்பு விமான ஆம்புலன்ஸ் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக டாக்காவிற்கு(Dhaka) வராததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

error: Content is protected !!