இலங்கை கருத்து & பகுப்பாய்வு செய்தி

நுவரெலியா கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு

  • December 6, 2025
  • 0 Comments

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருந்துகின்றனர். மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் தற்போது வரை நலிவடைந்து வருகிறது. நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கை நிலங்களில் வெள்ள நீர் உட்பிரவேசித்தது. அதன் விளைவாக மலைநாட்டு மரக்கறி […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் ஏழு பிட் புல் நாய்களால் தாக்கப்பட்டு ஆண் மற்றும் 3 மாத குழந்தை மரணம்

  • December 6, 2025
  • 0 Comments

டென்னசியில்(Tennessee) ஒரு ஆண் மற்றும் அவரது 3 மாத பேத்தி ஏழு பிட் புல்(pit bulls) நாய்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தி நியூயார்க் போஸ்ட்(The New York Post) செய்தி வெளியிட்டுள்ளது. 50 வயதான ஜேம்ஸ் அலெக்சாண்டர் ஸ்மித்(James Alexander Smith) மற்றும் குழந்தை துல்லாஹோமாவில்(Tullahoma) உள்ள அவர்களின் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்த போது குழந்தை தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் பாதிக்கப்பட்டவர்களை அடைய ஏழு பிட் புல் நாய்களையும் சுட வேண்டிய […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் குழந்தை உட்பட 38 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்

  • December 6, 2025
  • 0 Comments

முன்னாள் பிரித்தானிய(Britain) மருத்துவர் ஒருவர், 13 வயதுக்குட்பட்ட குழந்தை உட்பட அவரது பராமரிப்பில் இருந்த 38 நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 38 வயதான நதானியேல் ஸ்பென்சர்(Nathaniel Spencer), மத்திய பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றியபோது நோயாளிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக பிராந்திய வழக்கறிஞர் பென் சாம்பிள்ஸ்(Ben Samples) தெரிவித்துள்ளார். ஸ்பென்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2017 மற்றும் 2021க்கு இடையில் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட்(Stoke-on-Trent) மற்றும் டட்லியில்(Dudley) உள்ள இரண்டு பிராந்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் நடந்ததாகக் […]

இந்தியா இலங்கை செய்தி

இலங்கை வந்தடைந்த இந்தியாவின் ஒன்பதாவது அவசர நிவாரண விமானம்

  • December 6, 2025
  • 0 Comments

இந்தியாவின் “ஆபரேஷன் சாகர் பந்து”(Operation Sagar Bandhu) திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகளின் ஒன்பதாவது தொகுதி கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை(BIA) வந்தடைந்துள்ளது. மேலும், இந்தப் பொருட்களுடன் இந்திய இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த 13 பொறியாளர்களும் உதவி வழங்க வருகை தந்துள்ளனர். இலங்கை இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்தப் பொருட்களை முறையாகப் பெற விமான நிலையத்தில் ஒன்று […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

14ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆபத்து!! விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

  • December 6, 2025
  • 0 Comments

நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே நாளை முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கும் மழை […]

உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசை பெற நோர்வே செல்லும் மரியா கொரினா மச்சாடோ

  • December 6, 2025
  • 0 Comments

நாட்டில் தலைமறைவாக வசித்து வரும் வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), தனது நோபல் பரிசைப் பெறுவதற்காக நோர்வே(Norway) தலைநகர் ஒஸ்லோவுக்குச்(Oslo) செல்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மச்சாடோவுடன் நான் பேசினேன், அவர் ஒஸ்லோவிற்கு வருகை தருவதை உறுதிப்படுத்தியுள்ளார் என்று நோர்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநரகம் மற்றும் நோர்வே நோபல் குழுவின் செயலாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென்(Kristian Berg Harpviken) குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, திகதி அல்லது பயண […]

இலங்கை செய்தி

இலங்கை: சிகப்பு எச்சரிக்கை பல பகுதிகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கையானது நாளை மாலை 4:00 மணி நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகையில் ஆபத்தான பகுதியில் இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளார்ககள். மேலும் அந்த அறிக்கையில் ஆபத்தான பகுதிகளை மூன்று நிலைகளாக பிரித்துள்ளனர் அதில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் (DSD) பின்வருமாறு:  சிவப்பு எச்சரிக்கை – கட்டாயம் வெளியேற வேண்டிய பிரதேச […]

இலங்கை

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

  • December 6, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வெளியாகிய அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக பதிவாகியிருந்தது. எனினும் அந்த எண்ணிக்கை தற்போது 618ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 583,030 குடும்பங்களைச் […]

இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் மரணம்

  • December 6, 2025
  • 0 Comments

தெஹிவளை பகுதியில் உள்ள விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து

  • December 6, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் […]

error: Content is protected !!