இலங்கை

வாகன ஆவணங்களை இழந்த உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • December 7, 2025
  • 0 Comments

வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியதால் ஆவணங்களை இழந்த அல்லது சேதமடைந்த வாகன உரிமையாளர்களுக்கு உதவுவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரானதும், டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் நடமாடும் சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை மீட்டெடுக்க முடியாமல் தவிப்பதாகவும் அவர் கூறினார். எனவே, ஆவணங்களை இழந்தவர்களிடமிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்து, மாற்று ஆவணங்களை […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் தாக்குதல் : போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!

  • December 7, 2025
  • 0 Comments

உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான்வெளி தாக்குதல்களுக்கு மத்தியில் போலத்தில் உள்ள நேட்டோ போர் விமானங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வார்சாவில் (Warsaw) உள்ள ஆயுதப்படை செயல்பாட்டுக் கட்டளை தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை அறிவித்துள்ளது. போர் விமானங்கள் தயார்படுத்தப்பட்டு, தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் உளவு அமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டதாக  அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தின்  வான்வெளி […]

இந்தியா

கோவாவில் உள்ள இரவு விடுதியில் பாரிய தீவிபத்து – 23 பேர் பலி!

  • December 7, 2025
  • 0 Comments

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு இரவு விடுதியில்  நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப் ஊழியர்கள் என்றும், பலர் கிளப்பைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு அதிக கூட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த இந்திய அதிகாரிகள் நேற்று […]

உலகம்

தென்சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்!

  • December 7, 2025
  • 0 Comments

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் சீன படைகள் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த வான்பரப்பில் சீன விமானப்படைகள் அச்சுறுத்தும் வகையில் பயணங்களை மேற்கொண்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா ஆக்கிரமித்துள்ள சுபி ரீஃபில் (Subi Reef) இருந்து பயணித்த விமானங்கள் பிலிப்பைன்ஸின் மீன்வளப் பணியகத்தின் செஸ்னா கிராண்ட் கேரவன் Cessna Grand Caravan aircraft) விமானத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் […]

உலகம்

டிஜிட்டல் பாடசாலை ( Digital School) கல்வியை ஊக்குவிக்கும் பிரபல நாடு!

  • December 7, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாட்டின் அமேசன் பகுதி மற்றும் கரீபியனை சுற்றியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்த கயானா அரசாங்கம் ஒன்லைன் பாடசாலையை ஆரம்பித்துள்ளது. குறித்த டிஜிட்டல் பாடசாலையில் (Guyana Digital School) ஏறக்குறைய 30000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது உயர்நிலைப் பாடசாலை படிப்புகளை வழங்குகிறது,  அடுத்த ஆண்டு முதல்  பாடத்திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளது. “இந்த திட்டமானது நாட்டிலும் உள்ள மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உண்மையான தரமான கல்வியை வழங்கும் அதேநேரம் அனைத்து பாடப் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. […]

ஐரோப்பா

ஐரோப்பாவை அடையும் முயற்சியில் 18 புலம்பெயர்வோர் பலி!

  • December 7, 2025
  • 0 Comments

கிரீஸ் ( Greek island) தீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மத்திய தரைக் கடலை கடற்க முற்பட்ட 18 புலம் பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பற்ற படகில் பயணித்த அவர்கள் படகு மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று  தெரிவித்துள்ளனர். குறித்த படகு பாதி மூழ்கிய நிலையில் துருக்கிய வணிகக் கப்பல் ஒன்றினால் இனங்காணப்பட்டதாகவும், இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை எனவும், மீட்பு நடவடிக்கைகள் […]

இலங்கை

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் மத்திய வங்கி!

  • December 7, 2025
  • 0 Comments

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை எண். 04 மூலம் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில் மீட்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ஜனவரி 15 , 2026 இற்குள் நிவாரணத்திற்கான எழுத்துப்பூர்வ அல்லது மின்னணு கோரிக்கைகளை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. வட்டி வரம்புடன், […]

இலங்கை செய்தி

கல்பிட்டியில் போதைப்பொருள் கும்பல் சிக்கியது!

  • December 6, 2025
  • 0 Comments

இலங்கை கடற்படையினர் கல்பிட்டியின் இப்பாந்தீவு கடல் பகுதியில் 2025 டிசம்பர் 05 அன்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று (03) பைகளை ஏற்றிச் சென்ற ஒரு படகையும், அதற்கு உதவ வந்த மற்றொரு படகையும், அத்துடன் நான்கு (04) சந்தேக நபர்களையும் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர் . . இன்று காலை (டிசம்பர் 06) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நிபுணர் பரிசோதனையில், அந்த மூன்று பைகளில் 63 கிலோவுக்கும் […]

செய்தி விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

  • December 6, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டி காக்(de Kock) 110 […]

error: Content is protected !!