இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை : மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

  • December 7, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது இன்று (7) மாலை 4 மணி முதல் நாளை(8) மாலை 4 மணி வரையான காலப்பகுதி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், முதலாம் நிலை எச்சரிக்கை 4 மாவட்டங்களுக்கும், 2ஆம் நிலை எச்சரிக்கை 5 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கீழே கொடுக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை எச்சரிக்கை […]

உலகம்

காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!

  • December 7, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். காசா அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், அமைதி திட்டத்தை விரிவுப்படுத்துவது மற்றும் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக  அவர் அறிவித்துள்ளார். பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அமைதி திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது […]

இலங்கை செய்தி

புளியங்குளம் குளக்கட்டினை சீர் செய்யும் இலங்கை விமானப்படை.

  • December 7, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் குளம் சேதம் அடைந்தது இதனூடாக அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர் உடைந்த அந்த குளக்கட்டினை சீர்திருத்தம் செய்யும் பணியில் வவுனியா இலங்கை விமானப்படையினர் இன்று( 2025 டிசம்பர் 06 ) மேற்கொண்டனர்.

இலங்கை செய்தி

மியான்மாரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள்

  • December 7, 2025
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இவற்றில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்கும் இதனை மியான்மருக்கான இலங்கைத் தூதர் திருமதி மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் திரு. சாவ் பியோ வின் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய பட்ஜெட் – பாரிய நன்மையை பெறும் புலம்பெயர்ந்தோர்!

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸின் (Rachel Reeves) சமீபத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 350,000 புலம் பெயர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வுகளுக்கு அமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது. புதிய பகுப்பாய்வு, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கூடுதல் கொடுப்பனவுகளில் மிகப்பெரிய பங்கைப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகள் நன்மைக்கான உச்சவரம்பு இரத்து செய்யப்பட்டதை  தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட  […]

இலங்கை செய்தி

இதுவரை 18 சடலங்களை மீட்டுள்ள UAE யின் மீட்புக்குழு

  • December 7, 2025
  • 0 Comments

இலங்கையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய அரபு எமிரேட் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் நேற்று தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்தன. K9 அலகுகள், மேம்பட்ட இருப்பிட உபகரணங்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக மண்சரிவுகள் சரிவுகள் மற்றும் ஆழமான இடிபாடுகள் வழியாக குழு செயல்பட்டது. அவர்களின் மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் பிரிவு ஒரு வயதான பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட காயமடைந்த 8 நபர்களுக்கு சம்பவ இடத்திலேயே […]

இந்தியா செய்தி

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கை வந்த அமெரிக்க விமானப்படை.

  • December 7, 2025
  • 0 Comments

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை… ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று (டிசம்பர் 07, 2025) இலங்கைக்கு வந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு […]

ஐரோப்பா

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ட்ரோன் தாக்குதல்கள்!

  • December 7, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைனிய அதிகாரிகள் நடத்திய மூன்றாவது நாள் பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இரவு முழுவதும் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய நகரமான கிரெமென்சுக்கில் (Kremenchuk)  உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் கியேவ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதாபிமானம்!

  • December 7, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர். இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளிக்கப்பட்டன. இந்த பொருட்களில், அரிசி 325kg, […]

இலங்கை

இலங்கையில் ஒரு முட்டை 70 ரூபாய்? இறைச்சிக்கு தட்டுப்பாடு?

  • December 7, 2025
  • 0 Comments

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட பேரழிவினால் சுமார் 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் எனவும் குறிப்பிட்டார். கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலையால் முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பெரும் வெள்ளம் காரணமாக பண்ணையில் […]

error: Content is protected !!