இலங்கை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா? முக்கிய ஆராய்ச்சியாளர் வெளியிட்ட கருத்து

  • December 12, 2025
  • 0 Comments

இயற்கை பேரிடர் காரணமாக இலங்கையில்  நெல் சாகுபிடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உணவு முறைகள் பிரிவின் தலைவரும் மூத்த ஆராய்ச்சியாளருமான டபிள்யூ.எம். துமிந்த பிரியதர்ஷன கூறுகிறார். “இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை, இயற்கை அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து எட்டாயிரம் (108,000) ஹெக்டேர் நெல் சாகுபடி முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையானது நெல் சாகுபடிக்கு ஏற்பட்ட சேதத்தைக் கருத்தில் கொண்டு, […]

இலங்கை

பொறுப்பற்ற செயல் – அசோக ரன்வல கைது!

  • December 12, 2025
  • 0 Comments

சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து சம்பவம் தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் எம்.பியாகும் ரணில் 

  • December 12, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருப்பதாக எதிர்க்கட்சியின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த ரணில் விக்ரமசிங்க, 2021ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரகலய போராட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாட்டின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உருவெடுத்திருந்தார். கடந்த ஆண்டு […]

இலங்கை

கர்ப்பிணி தாய்மாருக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  5,000 ரூபாய் ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 2025 நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் தாய்வழி மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஒரு முறை உதவித்தொகை வழங்கப்படும். பிரதேச செயலக அலுவலகங்கள் மூலம் டிசம்பர் 16 ஆம் திகதி இந்த தொகை விநியோகிக்கப்படும் பண்டிகைக் காலத்தில் தாய்வழி […]

ஐரோப்பா செய்தி

போர் பேச்சுவார்த்தைகளில் விரக்தியடைந்துள்ள ட்ரம்ப் – அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

உக்ரைனில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உண்மையான வாய்ப்பு இருந்தால் மட்டுமே ஐரோப்பிய பேச்சுவார்த்தைகளுக்கு பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போர் பற்றிய அமைதி பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினராலும் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்த முன்னேற்றத்தையும் தராத சந்திப்புகளால் சோர்வடைந்துள்ளார் என்றும் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட்  (Karoline Leavitt) கூறினார். தனது சொந்த நலனுக்காக தொடர்ந்து விவாதங்களை நடத்துவதற்குப் பதிலாக, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கான ட்ரம்பின் விருப்பத்தையும் அவர்  எடுத்துரைத்தார். விரைவான […]

இலங்கை செய்தி

பேரிடரால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!

  • December 12, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (12 ) மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 211 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 713 வீடுகள் முழமையாகவும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 805 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரணில் ஏன் நிவாரணம் வழங்கவில்லை?

  • December 12, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பை அவர் நடத்தினார். இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்திரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளார். ரணில் என்ன செய்தார் என அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன கூறியவை வருமாறு, “ ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவர். எனவே, அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சொத்துகளை […]

இலங்கை

சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – NBRO எச்சரிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும்  ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மூத்த புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்குப் கருத்து வெளியிட்ட அவர்,  நான்கு மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு  சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அபாயங்கள் இருந்தபோதிலும், வார இறுதி சுற்றுலாக்களுக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வருவதாக சுட்டிக்காட்டிய அவர்  […]

இலங்கை

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இலங்கையில் தங்கத்தின் விலையும் அதனுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. இதன்படி உலக சந்தையில் இன்றை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை  $4,266 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையில்   நேற்றைய விலையுடன்  ஒப்பிடும்போது  இன்று  பவுண் ஒன்றின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில்   22 காரட் பவுண் ஒன்றின்விலை  312,000 ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில்,  24 காரட் பவுண் ஒன்றின்விலை,  339,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

உலகம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் மோசடி – பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்!

  • December 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் மெய்நிகர் கடத்தல் மோசடி அதிகரித்து வருவதாக FBI அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருடி, பணம் கோருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, அன்புக்குரியவரை கடத்தியதாக பொய் கூறி கப்பம் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மோசடியான அழைப்புகள், அல்லது செய்திகள் கிடைக்கப்பெற்றால் அதனை உறுதிப்படுத்துவதற்காக அன்புக்குறியவர்களுடன் பேசும், பிரத்தியேக வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். […]

error: Content is protected !!