இலங்கை

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்! வானிலை ஆய்வு மையம்

தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் சமீபத்திய வானிலை அறிக்கையில், தீவின் தென்மேற்கு பகுதியில் மழை தொடரும் என்றும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். […]

ஐரோப்பா

பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லாவுக்கு பொலிஸார் எச்சரிக்கை கடிதம்..!

  • August 29, 2023
  • 0 Comments

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருட்டையும் பொலிஸார் விசாரணை செய்தாகவேண்டும் என பிரித்தானிய உள்துறைச் செயலர் அறிவித்திருந்தார். பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், கடைகளில் திருடுவது, சேதப்படுத்துவது, மொபைல் திருட்டு அல்லது கார் திருட்டு ஆகிய குற்றச்செயல்களை பொலிசார் முக்கியத்துவம் குறைந்தவையாக கருதுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியிருந்தார்.ஆகவே, குற்றச்செயல் எத்தகையதாயினும் அது குறித்து பொலிர் விசாரணை செய்தாகவேண்டும் என சுவெல்லா அறிவித்திருந்தார். சுவெல்லாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. […]

பொழுதுபோக்கு

ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த சன் பிக்சர்ஸ்… கொளுத்திப் போட்ட பிரபலம்

  • August 29, 2023
  • 0 Comments

ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிடாத வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை தயாரித்த நிலையில் இந்த படத்தில் நடித்த பிரபலங்களுக்கு கிட்டத்தட்ட 130 கோடி சம்பளமாக கொடுத்திருக்கிறது. அதிலும் சிவராஜ் குமார், மோகன்லால் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் கோடிகளில் சம்பளம் வாங்கி இருந்தனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 110 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக ரஜினி 80 […]

வட அமெரிக்கா

வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: பேராசிரியர் பலி!

  • August 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் கட்டிடத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பேராசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பேராசிரியர் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த பேராசிரியரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் CCTV காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் […]

இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சியான தகவல்!

1.5 மில்லியன் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் ஷெஹான் சேமடிங்க தெரிவித்தார். உதவி தேவைப்படும் இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உள்ளது என்றார். இதன்படி முதற்கட்டமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இதற்கிடையில், வார நாட்களில் […]

இலங்கை

யாழில் ஹெரோயினை ஊசி மூலம் நுர்ந்த இளைஞர் ஒருவர் பலி!

  • August 29, 2023
  • 0 Comments

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அதேவேளை […]

உலகம்

அமெரிக்காவில் பிடிப்பட்ட இராட்சத முதலை!

  • August 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நான்கு மீற்றருக்கும் அதிக நீளமுள்ள முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. நான்கு வேட்டைக்காரர்களால் சுமார் ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின் குறித்த முதலை யாஸூ ஆற்றில் பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதலை வேட்டை பருவத்தின் தொடக்க நாளில் பிடிக்கப்பட்ட இந்த முதலையின் எடை 364 கிலோ என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய கிழக்கு

அமைதியான பயணத்தை விரும்புவோருக்கு ‘அடல்ட் ஒன்லி’ பகுதி- கோரண்டன் ஏர்லைன்ஸ் புதிய திட்டம்

  • August 29, 2023
  • 0 Comments

விமானங்களில் பயணம் செய்யும்போது சிலர் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். குழந்தைகள் அழுகை சத்தமும் அவ்வப்போது கேட்கும். இதுபோன்ற சூழல், அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். சில சமயங்களில் இது தொடர்பாக வாக்குவாதமும் ஏற்படுகிறது. எனவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற பகுதியை கோரண்டன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வழங்குகிறது. குழந்தைகளின் சத்தம் இல்லாத […]

ஆசியா

சீனாவில் தம்பதிகளுக்கு வழங்கப்படும் வெகுமதி!

  • August 29, 2023
  • 0 Comments

கிழக்கு சீனாவில்  மணப்பெண்ணின் வயது 25 அல்லது அதற்கு குறைவானதாக இருந்தால் தம்பதிகளுக்கு 1,000 யுவான் ($210) “வெகுமதி” வழங்குவதாக அறிவித்துள்ளது. குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா மேற்கொள்ளும் முயற்சிகளில் இது சமீபத்திய நடவடிக்கையாகும். ஏற்கனவே குழந்தைகளைப் பெற்றுள்ள தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்பு, கருவுறுதல் மற்றும் கல்விக்கான மானியங்களையும் சீன அரசு வழங்கியுள்ளது. ஆறு தசாப்தங்களில் நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து சீனாவின் பிறப்பு விகிதத்தை உயர்த்த அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதன்படி  […]

இலங்கை

தண்ணிமுறிப்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகள்!! கண்ணீருடன் தாய்யொருவர் விடுத்துள்ள கோரிக்கை

நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய தாய்யொருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். தண்ணிமுறிபபு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர். குறித்த கள விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தாய்யொருவர் கூறுகையில், […]

error: Content is protected !!