பொழுதுபோக்கு

அந்த 7 நாட்களால் எம்.ஜி.ஆர் மூலம் வந்த சிக்கல்… வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை

  • September 2, 2023
  • 0 Comments

80களில் கொடிகட்டிப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. இவர், தமிழ் , கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, பிரபு, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அம்பிகா குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு காணாமல் போனார். அவர் குறித்து டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். குடும்பபாங்கான முகம் கொண்ட அம்பிகா ஒரு சாதாரண படத்தில் தான் தமிழில் அறிமுகம் […]

தமிழ்நாடு

‘ஆதித்யா L1’ ஒரு முட்டாள்தனம்; காயத்ரி ரகுராம் ட்வீட்

  • September 2, 2023
  • 0 Comments

சில காரணங்களால் ஆதித்யா L1 -யை முற்றிலும் முட்டாள்தனமாக உணர்கிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக கூறியுள்ளார். தொடர்ந்து விண்வெளித்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இஸ்ரோ, சூரியனின் வெளிப்புறப்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று நண்பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு, பல பாராட்டுக்கள் குவிந்துவரும் நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து பேசியுள்ளார்.இது […]

இலங்கை

வவுனியாவில் குடைசாய்ந்த உழவு இயந்திரம் – சிறுவன் பலி!

  • September 2, 2023
  • 0 Comments

வவுனியா – பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. இதன்போது, உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் ஐந்து பேர் பயணித்த நிலையில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 வயதான சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் […]

இலங்கை

மீண்டும் நாட்டில் வரிசை யுகம் ஏற்படும் அபாயம்! சி.கா.செந்தில்வேல்

எதிர்வரும் காலத்தில் நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட உள்ளது. அண்மையில் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனின் ஒரு பகுதி மீள வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிச்சயமாக நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்பட சாத்தியம் உள்ளது. வரிசை ஏற்படும் அபாயம் தற்பொழுது தலைதூக்க வழி கோருகின்றது என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.. இந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் […]

ஐரோப்பா

குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • September 2, 2023
  • 0 Comments

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று (02.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக  ஜேர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 142 கிமீ (88 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜேர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

இலங்கை

கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே நேற்று (01) கரடி தாக்கியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிசார் […]

இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் முயற்சில் சுமார் 5000 வைத்தியர்கள் – வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன்

  • September 2, 2023
  • 0 Comments

சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற […]

இலங்கை

கீரி சம்பா அரிசியை பதுக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

  • September 2, 2023
  • 0 Comments

கீரி சம்பா அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இன்று (02.09) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த இடங்களும், சட்டவிரோதமாக அரிசியை பதுக்கி வைத்துள்ள இடங்களும் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகஸ்ட் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2278/02 இன் படி கீரி […]

ஆசியா

பாக். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை – ராணுவ மேஜர் உட்பட மூவர் பலி

  • September 2, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் வடக்கு வாரிஸ்தான் மாவட்டத்தில் ஷா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மிரான் ஷா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் தலைமையில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், கைபர் மாவட்டம் திரா பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் […]

இலங்கை

மறைந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் நினைவாக இரத்ததான முகாம்!

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை(02) யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர். பிரகாஸினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தரம் […]

error: Content is protected !!