உலகம்

ஜப்பானில் மீண்டும் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!

  • December 12, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடகிழக்கில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளது. ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவின் (Honshu) வடக்கே உள்ள அமோரி (Aomori) மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில், இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ (Hokkaido), அமோரி (Aomori), இவாட் (Iwate) மற்றும் மியாகி (Miyagi) மாகாணங்களில் 1 மீட்டர் (3.2 அடி) வரை சுனாமி ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

உலகம் செய்தி

கலிபோர்னியாவின் (California) தெற்கு எல்லையில் இராணுவ மண்டலத்தை நிறுவிய ட்ரம்ப்!

  • December 12, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவின் (California) தெற்கு எல்லையில் புதிய இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை ட்ரம்ப் நிர்வாகம் நிறுவியுள்ளது. சான் டியாகோ (San Diego) மற்றும் இம்பீரியல் (Imperial) மாவட்டங்களில் உள்ள 760 ஏக்கர்நிலத்தின் அதிகார வரம்பை மூன்று ஆண்டுகளுக்கு கடற்படைக்கு மாற்றுவதாக உள்துறைத் துறை அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், சட்டவிரோத எல்லைக் கடப்பு பகுதிகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெக்சாஸ் (Texas), நியூ மெக்ஸிகோ (New Mexico)  மற்றும் அரிசோனாவில் (Arizona) அமைக்கப்பட்ட இந்த  […]

ஐரோப்பா செய்தி

உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பை பலப்படுத்தும் இங்கிலாந்து!

  • December 12, 2025
  • 0 Comments

வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இங்கிலாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் அதன் உளவுத்துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்புடைய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ரோயல் கடற்படை, பிரித்தானிய இராணுவம், ரோயல் விமானப்படை, இங்கிலாந்து விண்வெளி கட்டளை மற்றும் நிரந்தர கூட்டுத் தலைமையகத்தின் பிரிவுகளை ஒன்றிணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலம், கடல், வான், விண்வெளி மற்றும் சைபர்ஸ்பேஸ் ஆகியவற்றிலிருந்து தகவல்களைச் சேகரிப்பதை விரைவுபடுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 […]

அரசியல் இலங்கை செய்தி

அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை: மஹிந்த அணி வியூகம்!

  • December 12, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். “   பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட  இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

முள்ளிக்குளத்தில் காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி!

  • December 12, 2025
  • 0 Comments

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன், கட்டமைத்தல்-சொந்தமாக்குதல்-செயல்படுத்துதல் மாதிரியின் கீழ் செயற்படுத்தப்படும் 100 மெகாவாட் திறன் கொண்ட முள்ளிக்குளம் காற்றாலை மின் பூங்காவுக்கு தனியார் துறை முதலீட்டாளர்களிடம் முன்மொழிவுகளை கோர […]

உலகம்

எல்லைப் பிரச்சினை – தாய்லாந்தில் பாராளுமன்றம் கலைப்பு!

  • December 12, 2025
  • 0 Comments

கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது. மேலும் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆணையில், பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) தனது சிறுபான்மை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து கட்டுப்படுத்த போராடி வரும் பிற சவால்களில் கொடிய எல்லைப் பிரச்சினையையும் மேற்கோள் காட்டினார். பாராளுமன்றத்தைக் கலைப்பதே பொருத்தமான தீர்வு. […]

ஆஸ்திரேலியா இலங்கை செய்தி விளையாட்டு

U-19 ஆஸி அணியில் இரு இலங்கை வீரர்கள்!

  • December 12, 2025
  • 0 Comments

2026 இல் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐசிசி உலகிக் கிண்ண தொடருக்கான 15 பேரடங்கிய அணி விபரத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவர் இடம்பிடித்துள்ளனர். நாதன் குரே, நிதேஸ் சாமுவேல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் நியூ சவூத் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்தியா மற்றும் சீனா வம்சாவளி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் உள்ள பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. 19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ண தொடர் நமீபியா மற்றும் சிம்பாப்வே […]

இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு: டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டு அறிக்கை!

  • December 12, 2025
  • 0 Comments

“ டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நிகழ்ந்த இழப்புகள் தொடர்பான ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்கும்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ  நம்பிக்கை வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு, “ சில நிறுவனங்களால் உத்தேச […]

இலங்கை செய்தி

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

  • December 12, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இடர் நிலைமையால் பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாத பட்சத்தில் பாடசாலை அதிபருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமையை எதிர்கொண்டிருந்தால் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்.

இலங்கை செய்தி

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மன்னாரில் 3 நாள் சிகிச்சை

  • December 12, 2025
  • 0 Comments

டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மன்னாரில் நாளை முதல் மூன்று நாள் நடமாடும் கால்நடை மருத்துவ சேவையை தொடங்குவதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத் தலைவர் டொக்டர் உபுல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கால்நடைகளைப் பராமரிக்கும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். வேளாண்மை, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை (DAPH) மற்றும் அரசு […]

error: Content is protected !!