இலங்கை

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்

  • December 13, 2025
  • 0 Comments

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த […]

விளையாட்டு

இறுதிப் போட்டியில் பங்கேற்கும் மல்யுத்த வீரர் ஜோன் சீனா (John Cena) !

  • December 13, 2025
  • 0 Comments

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இரசிகர்களால் மல்யுத்த ஜாம்பவான் என்று போற்றப்படும் அமெரிக்க மல்யுத்த சாம்பியன் ஜான் சீனா (John Cena)  , இன்று (13) தனது இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டி அமெரிக்க நேரப்படி நாளை (14) காலை நடைபெறும். அதன்படி, ஜான் சீனாவின் 20 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை வாழ்க்கை இந்த போட்டியுடன் முடிவடையவுள்ளது. இறுதிப் போட்டியில் அவர்  ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ‘GUNTHER’  ஐ எதிர்கொள்ளவுள்ளார். ஜான் சீனா, […]

இலங்கை செய்தி

டித்வா புயல் – பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்கும் அதிகாரிகள்!

  • December 13, 2025
  • 0 Comments

‘டித்வா’ சிறு புயல்களால் பாதிக்கப்பட்ட நிலங்களின் கணக்கெடுப்பை நடத்துவதில் காணி ஆணையர் துறை கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கப்பட்டதாக மாற்றிய பின், அந்த நிலங்களை மீண்டும் அளவிட வேண்டும் என்று காணி ஆணையர் ஜெனரல் சந்தன ரணவீர ஆராச்சி கூறுகிறார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், அபாய வலயங்களில் அமைந்துள்ள நிலங்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டால், மானிய அனுமதி பெற்ற நிலங்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் அல்லது நிலத்தைத் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு Golden Card Visa – ட்ரம்பின் புதிய திட்டம் நடைமுறைக்கு 

  • December 13, 2025
  • 0 Comments

அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது உலகம் முழுவதும் பலரதும் கனவு. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் தங்கி வேலை செய்வதையும் குடியேறுவதையும் கடுமையானதாக மாற்றியுள்ளது. இதனால் விசா பெறுவது கடினமாகவும், ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளவர்கள் கூட தங்களது நிலையை பாதுகாத்து நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்ன் ட்ரம்ப் நிர்வாகம் Golden Card Visa எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோல்ட் கார்டு விசா (Golden Card Visa )என்றால் என்ன? இந்த […]

இலங்கை செய்தி

வெள்ள அனர்த்தம்: சிலாபம் வைத்தியசாலையில் 1,200 மில்லியன் ரூபா இழப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வினை மேற்கொண்டார். வெள்ள அனர்த்தம் காரணமாக சிலாப மாவட்ட வைத்தியசாலையில் ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது. “ இரு முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போதுள்ள வளாகத்தை விட உயர் தரத்தில் வைத்தியசாலை கட்டப்படும்.” என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது உறுதியளித்தார். வெளிநோயாளர் பிரிவு, மருத்துவமனை வளாகம், வார்டுகள், மருந்தகம், […]

ஆஸ்திரேலியா செய்தி

பசுபிக் பிராந்திய பாதுகாப்பு: ஆஸ்திரேலியா புது வியூகம்!

  • December 13, 2025
  • 0 Comments

பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடலுக்கடியில் மூன்று கேபிள் இணைப்புத் திட்டங்களை கூகுள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் இதற்குரிய நிதி உதவியை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. மேற்படி கேபிள் திட்டமானது பப்புவா நியூ கினியாவின் டிஜிட்டல் துறையில் புரட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பப்புவா நியூ கினியா உட்பட பசுபிக் பிராந்தியத்தில் தனத செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கு சீனா தீவிர் காட்டிவருகின்றது. பப்புவா நியூ […]

இலங்கை

பாலியல் வன்கொடுமை வளர்ந்து வரும் நீண்டகால பிரச்சினையாக மாறியுள்ளது!

  • December 13, 2025
  • 0 Comments

பாலியல் வன்கொடுமைக்கான தண்டனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு சிலாபத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் 27 வயதான திருமணமான ஒருவரால் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டார். சந்தேகநபர் மீது 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு 18 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் – மகாநாயக்க தேரர்களிடம் உறுதியளித்த சந்தோஷ் ஜா

  • December 13, 2025
  • 0 Comments

இயற்கை இடர்கள் காரணமாக இலங்கை மக்கள் சந்தித்துள்ள பெரும் துயரத்தில் பங்கேற்று அவர்களுக்கு உதவிகளை வழங்கிவரும் இந்தியாவுக்கு மகாநாயக்க தேரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று வெள்ளிக்கிழமை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு தமது நன்றிகளை தெரிவித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் […]

உலகம் செய்தி

நியூ ஜெர்சியில் (New Jersey) அமுலுக்கு வரும் தடை – மீறினால் சட்டநவடிக்கை!

  • December 13, 2025
  • 0 Comments

நியூ ஜெர்சியில் (New Jersey) உணவகங்கள் மற்றும் பாடசாலைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பொருட்களை  தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. தொடர்புடைய சட்டமூலம்  டேக்அவே ஆர்டர்களுக்கும்  (takeaway orders) பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  பாடசாலைகள் மற்றும், சுகாதார நிலையங்களுக்கு மாத்திரம் சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்திற்கு இணங்காத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது முறை இதே தவறை செய்யும் பொழுது  தண்டப்பணமாக $1,000 டொலரும்,   விதி […]

உலகம்

மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்

  • December 13, 2025
  • 0 Comments

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸ் மன்னர் தமக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்திருந்தார். மன்னர் சார்லஸ் புற்றுநோயின் அபாய கட்டத்திலிருந்து மீண்டுள்ளதுடன், அவரது நோய் தன்மை மிகவும் நேர்மறையான கட்டத்தை எட்டியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மன்னர் முழுமையாக […]

error: Content is protected !!