இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரான்ஸ் நாட்டவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பிரான்ஸ் பிரஜை ஒருவர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள், மொத்தமாக 4.611 கிலோகிராம் எடையுள்ள தங்கத்துடன் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

35 வயதான அவர் இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கு வந்திருந்த போதிலும், அவர் 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே இலங்கைக்கு விஜயம் செய்வதை கருத்திற்கொண்டு அதிகாரிகள் அவரது பயணப்பொதிகளை பரிசோதித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம், விசாரணையைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு பயணிகளுக்கு 70 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தத் தவறியதால் அவரை நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த இலங்கை சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு, குற்றம் சாட்டப்பட்டவரை 2023 ஜூன் 08 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!