இலங்கை செய்தி

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை: பின்னணி என்ன?

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இரு நாட்கள் பயணமாகவே அவர் கொழும்பு வருகின்றார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி அநுரரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவுடனும், சீன வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை -சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன குறித்து தனது விஜயத்தின்போது சீன வெளிவிவகார அமைச்சர் அவதானம் செலுத்தவுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, சீன- இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ளவதற்காக, 2022 ஜனவரியில் கடைசியாக கொழும்பு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கடந்த மாதம் இலங்கை வந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் கொழும்பு வந்திருந்தார். இதன்போது இலங்கைக்குரிய உதவித் திட்டங்களை அவர் அறிவித்தார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!