செய்தி வட அமெரிக்கா

பல்கலைக்கழக கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரிழந்த அமெரிக்க இளம்பெண்

நியூயார்க்கில் உள்ள கட்டிடத்தில் இருந்து குதித்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத 18 வயதுடைய பெண், ஆறு மாடி NYU கலைக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியின் ஜன்னலில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இளம்பெண் சுயநினைவின்றி இருப்பதையும், அவரது உடலில் பலத்த காயத்துடன் பதிலளிக்காமல் இருப்பதையும் கண்டனர். உடனடியாக பெல்வியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது, அவர் NYU மாணவியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அப்போது அருகில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த 30 வயதான ஜஸ்டினா சங், ”அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாகக் கூறினார்.

இதற்கிடையில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், வேலிக்கு வெளியே ரத்தம் சிதறிய பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் மர்மமாகவே உள்ளது.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி