இலங்கை செய்தி

பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்ததில் முச்சக்கர வண்டியும், கடையும் சேதம்

நேற்று மதியம் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று இயங்கிக்கொண்டிருந்த போது அதன் வலது முன் சக்கரம் கழன்று விழுந்ததில் அருகில் உள்ள கடை ஒன்று சேதமடைந்துள்ளது.

யட்டியந்தோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ்ஸின் சக்கரம் கழன்று விழுந்துள்ளது

முச்சக்கர வண்டி ஒன்றும் கணனி திருத்தும் நிலையம் ஒன்றும் சக்கரம் தளர்ந்ததால் சேதமடைந்துள்ளது.

எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், நஷ்ட ஈடு வழங்காமல் பஸ்ஸை அவ்விடத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனவும் கடைக்காரரும் முச்சக்கரவண்டி உரிமையாளரும் தெரிவித்து பஸ்ஸின் சக்கரத்தை யட்டியந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content