இலங்கை

இலங்கையில் பாடசாலை சுவரொன்று இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டியவில் பாடசாலை ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

வெல்லம்பிட்டிய, வேரகொடெல்ல கனிஷ்ட கல்லூரி மாணவர்கள் குழுவொன்று விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பாடசாலையில் தரம் 01 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 6 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஒரு மாணவர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 06 மாணவர்களில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்