இலங்கை செய்தி

தலையில் கல் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

கேகாலை நூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேஹாகே பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் தலையில் கல் வீழ்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

கித்துல்கல பல்லேஹாகே பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தின் போது, உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டின் மேல் பகுதியில் உள்ள மலைப்பாதையை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, வீட்டிற்கு அருகில் இருந்த சிறுவனின் தலையில் கல் ஒன்று வீழ்ந்துள்ள நிலையில் காயமடைந்த சிறுவன் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை