இலங்கைக்கு பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரிப்பு!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் நாட்டிற்கு பணியாளர்கள் அனுப்பும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜனவரி மாதத்திற்கான பணியாளர்களின் பணம் 11.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி 2024க்கான பணியாளர் பணம் 487.6 அமெரிக்க டாலராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 6 times, 1 visits today)