இலங்கை செய்தி

இலங்கையில் நீக்கப்படும் வரம்புகள் – அமைச்சரவை அனுமதி

இலங்கையில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாயை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்கப்படவுள்ளது.

அதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நேற்று தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து சில நிபந்தனைகளின் கீழ் இலங்கை மக்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான நிதியை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

அதன் மூலம் இலங்கையின் கையிருப்பு படிப்படியாக மேம்பட்டுள்ளது. மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் வரம்புகள் அதிகரிக்கப்படும் என பந்துல குணவர்தன வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு, பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிதி நெருக்கடியிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது. இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இவற்றுள் சுமார் 1.5 பில்லியன் டொலர் கையிருப்பு சீன யுவானின் குறிப்பிடப்பட்ட இடமாற்று ஆகும்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content