வட அமெரிக்கா

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்திருப்பவர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.உயிரிழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவினர்களா என்பது பற்றிய விபரங்களும் கண்டறியப்படவில்லை.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே மரணத்திற்கான காரணங்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கேய் வீதி யாங் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 47 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்