இலங்கை செய்தி

பெலியத்த துப்பாக்கிச் சூடு!! இரு பெண்கள் கைது

பெலியத்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொலைக்கு உதவிய இரு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர்கள் இருவரையும் ரத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பெலியத்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் மீது பெண்கள் தலைமையிலான பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான கொலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக  பொலிசார் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!